Sunday, June 29, 2008

உன்னை சந்திக்காமலே...

எனது சூழலில் திளைத்திருந்தேன் !
துன்பம் அறியாமல் திரிந்திருந்தேன் !
இளவேனில் கால வெயில் போல வந்தாய் !
புதுப்புது எண்ணங்கள், உணர்வுகள் தந்தாய் !
வளம் சேர்க்கும் நதி என்று நினைத்திருந்தேன் !
காட்டாறு போல உள்ளதையும் அடித்துச்சென்றாய் !
உன்னால் கிடைத்த இன்பங்கள்...
இன்று வேதனை அளிக்கும் கணைகள் !
உன்னை சந்திக்காமலே இருந்திருக்கலாம் !!!