Saturday, August 22, 2009

கைப்பேசி

என் காதலைச் சேர்த்த கைப்பேசியே!
உன்னைப் படைத்தவனை நான் வாழ்த்துவேன்!

ஆட்சி இல்லா இந்த நளனுக்கு
அன்னப் பட்சியாய் தூது போனாய்!

நண்பர்களோடு அரட்டையில் இருந்தபோதும்
ஒரு மணி அடித்து என்னை தனியொரு
உலகிற்கு அழைத்துச் சென்றாய்!

ஊடல் கொள்ளவும் உதவினாய்!
அது கடந்து கூடலின் இன்பமும் காட்டினாய்!

நீ காமபானத்தின் பரிமான வளர்ச்சியோ?
SMS காதல் இலக்கணத்தின் மறுமலர்ச்சியோ?

No comments: