Saturday, August 22, 2009

நிலவின் ஆற்றாமை!

அழ‌கின் உட்ச‌மாய் க‌ட‌வுள் ப‌டைத்த‌து நீயே என்றேன்!
பெள‌ர்ண‌மி நில‌வைப் பார்த்த‌தில்லையோ என்றாய்?

உன்னுட‌ன் எத‌ற்கு விவாத‌ம்…
ந‌ம் முற்ற‌த்திலே போய் பார்ப்போம் என்றேன்!

உன் வ‌ன‌ப்பை க‌ண்ட‌ வெண்ணிலவோ
வெட்க‌ம் தாளாம‌ல் மேக‌ம் என்னும்
திரையின் பின்னே ஒளிந்துகொண்டாள்!

No comments: