Saturday, August 22, 2009

கிழக்குக் கடற்க்கரைச் சாலை

கிழக்குக் கடற்க்கரைச் சாலையிலே
எங்கும் இருக்கிறது அழகு!

உன்னை ஏற்றிக்கொண்டு புறப்பட்டேன்
போகும் வழியெல்லாம் அழகு!

தங்கத்துகள் போன்ற மணற்பரப்பு பொன்னழகு
வெண்ணுரை உமிழும் நீலலைகள் வண்ணழகு

வான்னிலா எழும் நேரம்…
உன் கண்களின் காந்த‌த்தால்
என்னைத் ஈர்த்து இழுத்தாய்!

அப்போது தான் அறிந்தேன்..
நீயே இயற்கையை விஞ்சிய அழகு!

No comments: